18 July 2013

இராமநாதபுரம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

இராமநாதபுரம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு


இராமநாதபுரம், ஜூலை. 18:

இராமநாதபுரம் அருகே உள்ள ஆலப்புளியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி இந்திராணி (வயது42). இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினர். இன்று அதிகாலை ‘மர்ம’ ஆசாமி ஒருவன் நைசாக நடராஜன் வீட்டுக்குள் புகுந்தான்.

வீட்டுக்குள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த இந்திராணி கழுத்தில் கிடந்த 1½ பவுன் தாலி செயினை பறித்துவிட்டு ஓடிவிட்டான். இன்று காலை இந்திராணி எழுந்து பார்த்தபோது கழுத்தில் தாலி செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த சென்ற ஆசாமியை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment