21 July 2013

நடிகைகள் பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்களா? கொதிக்கிறார் குஷ்பு!!

நடிகைகள் பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்களா? 
கொதிக்கிறார் குஷ்பு!!



சமீபத்தில் ஒரு நபர் தனது டுவிட்டரில் நடிகைகளை விலைமாதுக்களாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தார். குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தவறான வழியில் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நடிகைகள் கொதித்தெழுந்துள்ளனர்.

அதிலும் நடிகை குஷ்பு ரொம்பவே டென்சனாகியிருக்கிறார். அந்த டுவிட்டர் செய்திக்கு அவர் பதிலளிக்கையில், நடிகைகளை பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்கள் என்று சராசரி மனிதர்கள் யாரும் குறிப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி ஒரு நபர் கூறியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் விபச்சார புரோக்கராகத்தான இருக்க வேண்டும். அவருக்கும், யாரேனும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட மோதலை அவர் இப்படி ஒட்டுமொத்த நடிகைகளைப்பற்றியும் கருத்து சொல்லியிருக்கிறார். இது தவறு.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தமாதிரி தவறான செய்தி பரப்புபவர்களை கண்டும் காணாததும் போல் இருக்கக்கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற செய்திகளை வெளியிட அவர்கள் அஞ்ச வேண்டும் என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

0 Responses to “நடிகைகள் பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்களா? கொதிக்கிறார் குஷ்பு!!”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT