11 October 2013

இராமநாதபுரம் தி.மு.க. செயலாளர் கொலையில் மேலும் 4 பேர் கைது

இராமநாதபுரம் தி.மு.க. செயலாளர் கொலையில் மேலும் 4 பேர் கைது


இராமநாதபுரம், அக். 11:

                    இராமநாதபுரத்தில் தி.மு.க. செயலாளர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் மாடகொட்டான் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது58), தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று சுந்தர ராஜனை வெட்டிக் கொலை செய்தது.

இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நிலத்தகராறு காரணமாக சுந்தரராஜன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொலையாளிகளை பிடிக்க கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்  ஜெயபால் ஆகியோர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34) என்பவரை  கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மலைச்சாமி(73), முருகேசன் (27), கோபால் (43), விக்கி என்ற விக்னேஸ்வரன் (26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 Responses to “இராமநாதபுரம் தி.மு.க. செயலாளர் கொலையில் மேலும் 4 பேர் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT