11 October 2013

அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு



நார்வே: 2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும்.

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் அழிக்கப்பட்டதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து தலைநகர் ஹேக்-கிலிருந்து O.P.C.W அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு உலகம் முழுவதுமுள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க 1997ம் ஆண்டு தோற்றுவிக்கப்ட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா உட்பட 259 பேர், 2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு போட்டியிட்டனர்.

0 Responses to “அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT