24 November 2013

சாயல்குடி அருகே தொழிலாளியை தாக்கிய தந்தை–மகன் கைது

சாயல்குடி அருகே தொழிலாளியை தாக்கிய தந்தை–மகன் கைது





சாயல்குடி, நவ. 24:


சாயல்குடி அருகே உள்ள மாரியூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது19) தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியசாமி (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த விரோதத்தில் முனியசாமி அவரது தந்தை அந்தோணிசாமி, உறவினர் சிவமுருகன் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக தமிழரசன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த தாக்குதலில் கத்திக் குத்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தமிழரசன் சிகிச்சைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சாயல்குடி போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அந்தோணிசாமி அவரது மகன் முனியசாமி ஆகியோரை கைது செய்தனர்.

0 Responses to “சாயல்குடி அருகே தொழிலாளியை தாக்கிய தந்தை–மகன் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT