18 December 2013
கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் முதுநிலை அதிகாரி கமுதி அருகே விபத்தில் பலி
Do you like this story?
கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின்
முதுநிலை அதிகாரி கமுதி அருகே விபத்தில் பலி
கீழக்கரை, டிச. 18:
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பீர்முகமது ஆரிப் (வயது 51). இவர் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் கமுதியில் இருந்து கீழக்கரை நோக்கி சென்றார்.
கோட்டைமேடு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பீர்முகமது ஆரிப் பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
பீர்முகமது ஆரிப் விபத்தில் இறந்ததை தொடர்ந்து முகமது சதக் பொறியியல் கல்லூரியில் கல்லூரி இயக்குனர் ஹபிமுகமது சதக்துல்லா தலைமையில் கல்லூரி முதல்வர் முகமது ஜகுபர் முன்னிலையில் இன்று காலை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் முதுநிலை அதிகாரி கமுதி அருகே விபத்தில் பலி”
Post a Comment