27 December 2013

தி.மு.க.வில் இணைந்தார் டி.ராஜேந்தர்: கருணாநிதி வரவேற்பு

தி.மு.க.வில் இணைந்தார் டி.ராஜேந்தர்: கருணாநிதி வரவேற்பு


சென்னை,டிச. 27:

         தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று லட்சிய தி.மு.க. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டவர் நடிகர் டி.ராஜேந்தர். அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது மக்களவைத் தேர்தல் பற்றி இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று ராஜேந்தர் தி.மு.க.வில் இணைந்தார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


அன்புத் தம்பி டி ராஜேந்தர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து, கழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சாரப் பணியிலே தீவிரமாக ஈடுபட்டு, பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால், கழகத்திலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது குறித்து நானும் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தேன். அவரும் விளக்கமளித்திருந்தார்.

இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரப் பகுதியை மேலும் வலிமைப்படுத்தும் எண்ணத்தோடு, என் அன்பு அழைப்பினையேற்று, என் விருப்பப்படி மீண்டும் கழகத்தில் அவர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தொண்டர்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment