5 June 2013
மீண்டும் சர்ச்சையில் குட்டிப்புலி: இந்து கடவுள் அவமதிப்பு கமிஷனர் அலுவலகத்தில் புகார்
Do you like this story?
மீண்டும் சர்ச்சையில் குட்டிப்புலி:
இந்து கடவுள் அவமதிப்பு கமிஷனர் அலுவலகத்தில் புகார்
நடிகரும் டைரக்டருமான சசிக்குமாரின் நடிப்பில் வெளியாகியுள்ள குட்டிப்புலி படத்தில் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் வெளியான குட்டிப்புலி திரைப்படத்தில் கதாநாயகன் சசிகுமார், சுடலைமாடசுவாமியை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கோவில் உண்டியலில் திருடுவது போலவும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற காட்சிகளுக்கு தடை விதிப்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “மீண்டும் சர்ச்சையில் குட்டிப்புலி: இந்து கடவுள் அவமதிப்பு கமிஷனர் அலுவலகத்தில் புகார்”
Post a Comment