12 June 2013

அம்பலமான அத்வானியின் நிபந்தனைகள் : மோடி தனக்கு கீழ் தான் பணியாற்ற வேண்டும்

6 மாத காலத்திற்காவது தன்னை பிரதமராக நியமிக்க வேண்டும்

அம்பலமான அத்வானியின் நிபந்தனைகள்


புதுடெல்லி: பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் குறைந்தது 6 மாத காலத்திற்காவது தன்னை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கையை கட்சி தலைமையால் நிராகரிக்கப்பட்டதே அத்வானியின் ராஜினாமாவிற்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அக்கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதனையை எதிர்த்து அத்வானி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். 

அவர் விதித்த 3 நிபந்தனைகள் ஏற்கபடாததால் அவர் ராஜினாமா முடிவிற்கு வந்ததாக அத்வானியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டாலும் வேட்பாளராக தம்மையை அறிவிக்க வேண்டும் என்றும், 6 மாத காலத்திற்கு பிரதமர் பதவியில் தன்னை இருக்கவிட வேண்டும் என்றும் அத்வானி கூறியதாக தெரிகிறது. மேலும் மோடி தனக்கு கீழ் தான் பணியாற்ற வேண்டும் என்றும் அத்வானி கூறியதாக தெரிகிறது. 

இதனிடையே அத்வானி நடத்திய ராஜினாமா ஆர்.எஸ்.எஸ் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. அத்வானி விதித்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட போதிலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து அத்வானியிடம் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

0 Responses to “அம்பலமான அத்வானியின் நிபந்தனைகள் : மோடி தனக்கு கீழ் தான் பணியாற்ற வேண்டும் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT