22 June 2013

பெப்சி உமாவுக்கு செக்ஸ்தொந்தரவு: டிவி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது

பெப்சி உமாவுக்கு செக்ஸ்தொந்தரவு
 டிவி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது 
சென்னை,
'பெப்சி உங்கள் சாய்ஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பெப்சி உமா. தற்போது அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். நடிகர், நடிகைகளுடன் கலந்துரையாடும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகியாக சரவணராஜன் இருந்தார்.

அவர் பெப்சி உமாவுக்கு அடிக்கடி செக்ஸ் தொந்தரவு செய்துவந்தார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டினார். சரவணராஜனின் தொல்லைகள் அதிகமானதால் இதுபற்றி பெப்சி உமா கிண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தொலைக் காட்சி தயாரிப்பு நிர்வாகி சரவணராஜனை நேற்றிரவு கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அவர் மீது வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரவணராஜன் இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சரவணராஜன் திருமணம் ஆனவர். ஆதம் பாக்கத்தை சேர்ந்தவர்.

0 Responses to “பெப்சி உமாவுக்கு செக்ஸ்தொந்தரவு: டிவி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT