19 October 2013

இராமநாதபுரம் பகுதியில் விடிய–விடிய பலத்தமழை: மின்கம்பங்கள் சாய்ந்தன

இராமநாதபுரம் பகுதியில் விடிய–விடிய பலத்தமழை
 மின்கம்பங்கள் சாய்ந்தன


இராமநாதபுரம்:

                     இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீர் கனமழை பெய்தது. இராமநாதபுரம் சுப்புதேவன்வலசை, அம்மன் கோவில், கேணிக்கரை, சூரங்கோட்டை, கீழக்கரை, தேவி பட்டினம் போன்ற பகுதியில் இடியுடன் பலத்த மழை கொட்டியது.

இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

சுப்புத்தேவன் வலசை பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் இருந்த ஏராளமான மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. 9 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தது.

இதனால் அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. சுப்புதேவன் வலசை, அம்மன் கோவில் பகுதி இருளில் மூழ்கியது. இன்று காலை மின் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கீழே விழுந்த மின்கம்பங்கள் சரி செய்து, மரங்களை அப்புறப்படுத்தினர்.

0 Responses to “இராமநாதபுரம் பகுதியில் விடிய–விடிய பலத்தமழை: மின்கம்பங்கள் சாய்ந்தன”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT