29 June 2013

டைரக்டரை மிகவும் கீழ்தரமாக பேசிய பிரபல நடிகையின் தாயார்! டைரக்டர் இயக்குனர் சங்கத்தில் புகார்

டைரக்டரை  மிகவும்  கீழ்தரமாக பேசிய பிரபல  நடிகையின் தாயார்!
 
டைரக்டர் இயக்குனர் சங்கத்தில் புகார்



சென்னை, ஜூன் 28:-


மதர் கிரீன்லேண்ட் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிக்குமார் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் உண்மை. இந்த படத்தில் சுஜிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சண்டிகரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சுஜிபாலா சூட்டிங் வர மறுத்துவிட்டார். 

இது தொடர்பாக டைரக்டர் பி.ரவிக்குமார் கூறியதாவது:-

சண்டிகரில் ‘உண்மை’ படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து விமான டிக்கெட் எடுக்க சுஜிபாலாவுக்கு போன் செய்தேன். அவரது அம்மா போனை எடுத்து சூட்டிங் வர முடியாது என்று கூறி விட்டார். சுஜிபாலாவிடம் பேச வேண்டும் என்று கூறினால் போனை கொடுக்க மறுக்கிறார்.

படத்துக்கு பேசிய மொத்த சம்பளமும் கொடுத்து விட்டேன். ஆனால் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் ஷுட்டிங் அனுப்ப முடியும் என்று கூறுகிறார்கள். என்னை டைரக்டர் என்றும் பார்க்காமல் சுஜிபாலாவின் தாயார் மிகவும் கீழ்தரமாக பேசுகிறார். சண்டிகாரில் படப்பிடிப்புக்காக ரூ.25 லட்சம் செலவில் அரங்கம் அமைத்துள்ளோம். தற்போது மழை சீசன் என்பதால் அந்த செட் வீணாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக இயக்குனர் சங்கத்திலும் டைரக்டர் பி.ரவிக்குமார் புகார் செய்துள்ளார். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் சுஜிபாலாவிடம் பேசுவதாக கூறியுள்ளார்.

0 Responses to “டைரக்டரை மிகவும் கீழ்தரமாக பேசிய பிரபல நடிகையின் தாயார்! டைரக்டர் இயக்குனர் சங்கத்தில் புகார்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT