13 July 2013
இளவரசன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
Do you like this story?
இளவரசன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது
உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
தர்மபுரி :
மர்மமான முறையில் இறந்த இளவரசனின் உடலை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இன்று மறு பிரேத பரிசோதனை செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் இளவரசன் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் இளவரசன் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இளவரசன் உடலை ஆய்வு செய்ய இரண்டு மருத்துவர்களை நியமித்தார். பின்னர் மருத்துவர்கள் தங்கராஜ், சம்பத்குமார் ஆகியோர் இளவரசன் உடலை ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த இருவரும் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மாறுபட்டவையாக இருந்தன. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் கொண்ட குழு இளவரசன் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும் என்று நீதிபதிகள் தனபால், சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் அடங்கிய குழு இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்தது. அங்கிருந்து மாவட்ட நிர்வாகத்தினர் சாலை மார்க்கமாக தர்மபுரிக்கு மருத்துவர்களை அழைத்து வந்தனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளவசரன் உடலை அவரது தாயார் அடையாளம் காட்ட மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனையை மேற்கொண்டது.
இளவரசன் உடல் மறுபிரேத பரிசோதனை முடிந்தது பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு
இளவரசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாலை 6.10 மணிக்கு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இளவரசன் உடல் பலத்த பாதுகாப்புடன்,அவரது சொந்த ஊரான நத்தம் காலணிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இளவரசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாலை 6.10 மணிக்கு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இளவரசன் உடல் பலத்த பாதுகாப்புடன்,அவரது சொந்த ஊரான நத்தம் காலணிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 15 பேர் ஜாமினில் திரும்பி வந்ததும், இறுதிச்சடங்கு குறித்து முடிவு செய்யப்படும் என இளவரசனின் தந்தை கூறினார்.
மேலும் அவர், மறு பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மறு பிரேத பரிசோதனை செய்ததில் தங்களுக்கு முழு திருப்தி அளிப்பதாகவும் கூறினார்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இளவரசன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு”
Post a Comment