16 July 2013

டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி: இராமநாதபுரம் மாவட்ட அணி முதலிடம் வென்றது

டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி

 இராமநாதபுரம் மாவட்ட அணி முதலிடம் வென்றது



இராமநாதபுரம், ஜூலை. 16:

                தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் கழகம், இராமநாதபுரம் மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியை தேசிய அளவிலான போட்டியாக நடத்தியது.  

மண்டபம் கேம்ப் விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இரண்டு தினங்கள் நடைபெற்றது. மாநில அளவிலான 18 அணிகளும், தேசிய அளவிலான போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டன.

மாநில அளவிலான போட்டியில் இராமநாதபுரம் மாவட்ட அணி வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தை மதுரை மாவட்ட அணி பெற்றது. 

தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடத்தை பெற்றது. பாண்டிச்சேரி அணி இரண்டாவது இடத்தை பெற்றது.

இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர் மற்றும் நகர் அ.தி.மு.க. செயலாளர் சீமான் மரைக்காயர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் உடன் இருந்தார்.

0 Responses to “டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி: இராமநாதபுரம் மாவட்ட அணி முதலிடம் வென்றது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT