22 September 2013

தனுஷ்கோடியில் வீட்டில் தனியாக இருந்த கர்ப்பிணி பெண் கற்பழிப்பு: மீனவர் கைது

தனுஷ்கோடியில் வீட்டில் தனியாக இருந்த 
கர்ப்பிணி பெண் கற்பழிப்பு மீனவர் கைது





இராமேசுவரம், செப். 22:

இராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ளது நடராஜபுரம். இங்கு வசிப்பவர் தமிழ்செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). (வயது 23). வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளி.

இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது பூமாதேவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கணவர் வெளிநாட்டு வேலைக்கு சென்றார்.

இதனால் தமிழ்செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று தமிழ்செல்வியின் தாய் வெளியே சென்று இருந்த நேரத்தில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அப்போது கம்பிப்பாடு பகுதியை சேர்ந்த மீனவர் கார்த்தீசுவரன், அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து தமிழ் செல்வியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து இராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தமிழ்செல்வியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேசுவரி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெனிபர், சுப்பையா (தனுஷ்கோடி) ஆகியோர் விசாரணை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட தமிழ்செல்வி பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கார்த்தீசுவரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 Responses to “தனுஷ்கோடியில் வீட்டில் தனியாக இருந்த கர்ப்பிணி பெண் கற்பழிப்பு: மீனவர் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT