22 November 2013
மயக்க மருந்து கொடுத்து 21 பெண் நோயாளிகளை சீரழித்த டாக்டருக்கு தண்டனை உறுதி
Do you like this story?
மயக்க மருந்து கொடுத்து
21 பெண் நோயாளிகளை சீரழித்த டாக்டருக்கு தண்டனை உறுதி
21 பெண் நோயாளிகளை சீரழித்த டாக்டருக்கு தண்டனை உறுதி
டொரான்டோ:
கனடாவில் சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகள் 21 பேருக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் தியேட்டரில் செக்ஸில் ஈடுபட்ட டாக்டருக்கு தண்டனை உறுதியாகிறது.
கனடா தலைநகர் ஒடாவாவின் மிகப்பெரிய நகரமான டொரான்டோவில் யார்க் என்ற பொது மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 2010,ம் ஆண்டில் மயக்க மருந்து நிபுணராக டாக்டர் ஜார்ஜ் தூட்நாட் பணியாற்றினார். அவர் பணியில் இருந்தபோது, தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகள் 21 பேருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். ஆபரேஷன் தியேட்டரில் பாதி மயக்கத்தில் இருந்த அந்த பெண்களிடம் செக்ஸில் ஈடுபட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்த பெண் நோயாளிகளால் டாக்டர் தவறாக நடந்து கொண்டதை உணர முடிந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.
பின்னர் மயக்கம் தெளிந்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் தனித்தனியாக டாக்டர் மீது புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் கனடாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து டொரான்டோ போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் நோயாளிகளை சீரழித்ததாக டாக்டர் ஜார்ஜை கைது செய்தனர். இந்த வழக்கு ஓண்டாரியோ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் மிக்கோம்ப், பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் ஜார்ஜ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ஜார்ஜ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் டாக்டருக்கு தண்டனை உறுதியாகி உள்ளது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “மயக்க மருந்து கொடுத்து 21 பெண் நோயாளிகளை சீரழித்த டாக்டருக்கு தண்டனை உறுதி ”
Post a Comment