9 December 2013

11 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு 2300 வாக்குகள்: எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது

11 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு 2300 வாக்குகள்
எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது 



புதுடெல்லி:

டெல்லியில் முதல் முறையாக 11 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக தோல்வியை சந்தித்தது. 11 தொகுதிகளிலும் சேர்த்து தேமுதிகவுக்கு 2300 வாக்குகள் மட்டும் கிடைத்தது.டெல்லியில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். 

அவர்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்க கூடிய 11  தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என்றும் அவர் அறிவித்தார்.

அதன்படி ஜங்புரா தொகுதி-எம்.சிவா, வசீர்பூர்&எஸ்.ஈஸ்வரி, ஜனக்புரி&சொர்ணம் காளிநாதன், புதுடெல்லி- ஜி.எஸ்.மணி, கல்காஜி- ராமு, ஆர்.கே.புரம் &எஸ்.டி.பிரகாஷ், நகர்&எம்.எஸ்.சுப்பிரமணியன், ரோகிணி&சு.செங்கோட்டையன், பாலம்&ரத்தினம், ராஜேந்திரா நகர்-பி.டி. தானப்பன்,.மாள்வியா நகர்-எஸ்.சர்மிளா ஆகியோர் போட்டியிட்டனர். 

இவர்களுக்கு ஆதரவாக விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும்  5 நாட்கள் பிரசாரம் செய்தார்.இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் நேற்று  எண்ணப்பட்டன. இதில், தேமுதிக போட்டியிட 11 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. 

11 தொகுதிகளையும் மொத்தம் 2300 வாக்குகள் மட்டுமே அந்த கட்சி பெற்றுள்ளது. இதனால், எல்லா தொகுதிகளிலும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

0 Responses to “11 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு 2300 வாக்குகள்: எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT