18 December 2013
சித்ரவதை செய்ததாக தந்தை புகார்: திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு
Do you like this story?
சித்ரவதை செய்ததாக தந்தை புகார்
திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு
திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு
சென்னை :
வெங்கல் அருகே குருவாயல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் உதயவிஜயன் (28), திருவள்ளூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி வசந்தி என்ற ஜெயந்தி (22). இவர்களுக்கு கடந்த ஏப்ரலில் திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். இந்நிலையில், வசந்தியின் உறவினர் வெங்கடேசன், சபரிமலைக்கு சென்றுவிட்டு பிரசாதம் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் வசந்தி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வசந்தி, உடல்நலம் சரியில்லாமல் படுத்திருந்தார். உடல்நிலை சரியில்லையா என வெங்கடேசன் கேட்டதற்கு, கணவர், மாமியார், மாமனார் அடித்து சித்ரவதை செய்வதாக கூறி வசந்தி அழுதுள்ளார்.
இதையடுத்து, வெங்கடேசன் வசந்தியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு அவரை வெங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். வசந்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்ததால் அங்கிருந்து செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே வசந்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வசந்தியின் தந்தை சந்திரன், வெங்கல் போலீசில் புகார் செய்தார். அதில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்தான் எனது மகள் இறந்துவிட்டாள். மகள் சாவுக்கு காரணமான அவரது கணவன் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, உதயவிஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை டிஎஸ்பி குமரவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். வசந்திக்கு திருமணமாகி 8 மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.
இதையடுத்து, வெங்கடேசன் வசந்தியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு அவரை வெங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். வசந்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்ததால் அங்கிருந்து செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே வசந்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வசந்தியின் தந்தை சந்திரன், வெங்கல் போலீசில் புகார் செய்தார். அதில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்தான் எனது மகள் இறந்துவிட்டாள். மகள் சாவுக்கு காரணமான அவரது கணவன் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, உதயவிஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை டிஎஸ்பி குமரவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். வசந்திக்கு திருமணமாகி 8 மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சித்ரவதை செய்ததாக தந்தை புகார்: திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு”
Post a Comment