26 May 2013

திருப்பதி கோவில் உண்டியலில் 1 மாதத்தில் 140 கிலோ தங்க நகைகள் குவிந்தது

திருப்பதி கோவில் உண்டியலில் 1 மாதத்தில் 140 கிலோ தங்க நகைகள் குவிந்தது


                   திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். தங்கம், வெள்ளி நகைகளை அதிகாரிகளின் முன் அனுமதி மற்றும் ரசீது பெற்று ஊண்டியலில் செலுத்த வேண்டும் என்ற விதி கடந்த 2010-ம் ஆண்டு முதல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் பக்தர்கள் தங்கம், வெள்ளி நகைகளையும் உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். 

தினந்தோறும் உண்டியல் எண்ணும் போது தங்க நகைகள் தரம் பிரிக்கப்படும். ஒரு மாதத்தில் கிடைக்கும் நகைகள் கணக்கிடப்பட்டு மாதந்தோறும் 25-ந்தேதி அறிவிக்கப்படும். இந்த வகையில் ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 25-ந் தேதி வரை காணிக்கை மூலம் 140 கிலோ தங்க நகைகள் கிடைத்து உள்ளது. 

இதற்கு முன்பு ஒரு மாதத்தில் 190 கிலோ தங்க நகை கிடைத்தது சாதனையாக கருதப்பட்டது. தற்போது 140 கிலோ தங்கம் கிடைத்திருப்பது 2-வது சாதனையாக கருதப்படுகிறது.

0 Responses to “திருப்பதி கோவில் உண்டியலில் 1 மாதத்தில் 140 கிலோ தங்க நகைகள் குவிந்தது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT