20 December 2013

கமுதி கோட்டைமேட்டில் தரமான உணவு வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

கமுதி கோட்டைமேட்டில் 
தரமான உணவு வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்


கமுதி:

கமுதி கோட்டைமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவர்கள் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி நேற்று காலை திடீரென சாப்பாட்டு தட்டுடன் விடுதியை விட்டு வெளியே வந்தனர். 

பின்னர் அவர்கள் கமுதி தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு தரமான உணவு வழங்கக்கோரி கோஷம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்த கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் அப்துல்லா ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் மாணவர்கள் கலைந்துசென்றனர்.

0 Responses to “கமுதி கோட்டைமேட்டில் தரமான உணவு வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT