28 June 2013

கேரளா போட் ஹவுஸ் விபச்சாரம் : 3 நாட்கள் அடைத்து வைத்து செக்ஸ் டார்ச்சர் அரபு நாட்டுப் பயணியிடமிருந்து தப்பிய இளம் பெண்

கேரளா போட் ஹவுஸ் விபச்சாரம்

3 நாட்கள் அடைத்து வைத்து செக்ஸ் டார்ச்சர் 

அரபு நாட்டுப் பயணியிடமிருந்து தப்பிய இளம் பெண் 


செக்ஸ் டூரிஸம் ஆகிய ஆலப்புழா: 



   கேரளா மாநிலத்தில்  படகுவீடுகளை மூலதனமாக வைத்து ஜெஸ்ஸி, ஜீனத், ஸ்நேகா என்ற மூன்று பெண்கள் விபச்சாரத் தொழில் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளையும்,அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டுவிபச்சாரத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றனராம். 


இதன்மூலம் பலஏக்கர் நிலங்கள், சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளனர்.

                           இவர்கள் ஏஜென்டுகளை நியமித்து கல்லூரிப் பெண்களை கவர்ந்து பாலியல் தொழிலுக்கு இழுத்துவிடுகின்றனர். இவர்களின் வலையில் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது பள்ளி மாணவிகளும் சிக்கியுள்ளனர். இந்த மாணவிகளை அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக்குகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

அரபு நாட்டுப் பயணியின்  தொல்லை தாங்க முடியாமல் தப்பிய இளம் பெண் 

                   அரபு நாட்டுப் பயணியிடம் மூன்று நாட்கள் அனுப்பிவைக்கப்பட்ட 20 வயதான இளம்பெண் அந்த பயணியின் தொல்லை தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்டாள்.

அந்தப் பெண்ணுக்கு 45,000 ரூபாய் கொடுத்துள்ள நிலையில் ஏஜெண்டுகளின் கைக்கு போனது போக அந்த இளம்பெண்ணுக்கு வெறும் 10,000 ரூபாயை மட்டுமே கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

இந்த ஒரு பெண் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான பெண்கள் இவ்வாறு ஏமாற்றி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதில் அதிக அளவில் மாணவிகள்தான் உள்ளனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

0 Responses to “கேரளா போட் ஹவுஸ் விபச்சாரம் : 3 நாட்கள் அடைத்து வைத்து செக்ஸ் டார்ச்சர் அரபு நாட்டுப் பயணியிடமிருந்து தப்பிய இளம் பெண்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT