28 June 2013

குளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை

குளோனிங் முறையில் 

ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண்  எலி

விஞ்ஞானிகள் சாதனை 


டோக்கியோ, ஜூன். 28:-

குளோனிங் முறையில் முதன் முறையாக ‘டோலி’ என்ற ஆடு உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து பன்றிகள் போன்ற விலங்கினங்களும் படைக்கப்பட்டது. தற்போது எலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதுவும் ஒரு துளி ரத்தத்தில் அதிநவீன முறையில் முதன் முறையாக இதை உருவாக்கியுள்ளனர். ஒரு எலியின் வாலில் இருந்து ரத்த ‘செல்’களை சேகரித்து அதில் இருந்து குளோனிங் முறையில் எலி பிறந்துள்ளது.

இந்த சாதனையை ஜப்பானின் கோபே நகரில் உள்ள ‘ரிகென்’ மையத்தில் உள்ள அறிவியல் மைய விஞ்ஞானிகள் படைத்துள்ளனர். குளோனிங் முறையில் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மூலம் குளோனிங் முறையில் பெண் எலி உருவாக்கப்பட்டது.

தற்போது அவை மற்ற எலிகளை போன்று அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளது. இவற்றால் இயற்கை முறையில் ஆண் எலியுடன் சேர்ந்து கருத்தரித்து குட்டி போட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to “குளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT