19 July 2013
இராமநாதபுரம் - ஏர்வாடியில் ரூ.1½ கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
Do you like this story?
இராமநாதபுரம் - ஏர்வாடியில்
ரூ.1½ கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
இராமநாதபுரம், ஜூலை. 19:
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் போதைப்பொருள் வைத்திருப்பதாக ‘கியூ’ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீசார் குறிப்பிட்ட விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு அறை எடுத்து தங்கியிருந்த 4 பேர் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் போதைப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
ஹெராயின் வகையிலான அந்த போதைப்பொருள் சுமார் 1 கிலோ அளவில் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1½ கோடியாகும். இதனை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அப்போது அங்கு அறை எடுத்து தங்கியிருந்த 4 பேர் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் போதைப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
ஹெராயின் வகையிலான அந்த போதைப்பொருள் சுமார் 1 கிலோ அளவில் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1½ கோடியாகும். இதனை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இராமநாதபுரம் - ஏர்வாடியில் ரூ.1½ கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்”
Post a Comment