30 September 2013

இந்திய அணி அறிவிப்பு : யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு

இந்திய அணி அறிவிப்பு : யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு


சென்னை: 

                 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில், ஆல்ரவுண்டர் யுவராஜ சிங் மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு பிறகு அவர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் - நவம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒரு டி20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சென்னையில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பாட்டீல் இந்திய அணியை அறிவித்தார்.

வீரர்கள் விவரம்:

மகேந்திர சிங் டோனி (கேப்டன்), தவான், ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பத்தி ராயுடு, முகம்மது ஷாமி, ஜெயதேவ் உட்கண்ட்.

0 Responses to “இந்திய அணி அறிவிப்பு : யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT