22 October 2013
இராமநாதபுரம் அருகே வாலிபர் மர்மச்சாவு: சாலையோரம் பிணமாக கிடந்ததால் பரபரப்பு
Do you like this story?
இராமநாதபுரம் அருகே வாலிபர் மர்மச்சாவு
சாலையோரம் பிணமாக கிடந்ததால் பரபரப்பு
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் அருகே உள்ள வெளிபட்டிணம் நாகநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் திருவருள் செல்வன் (வயது18). இவர், தந்தை வைத்துள்ள டிராக்டரில் கிளீனராக செயல்பட்டு வந்தார். அங்கு வேலை இல்லாத நேரத்தில் ஜே.சி.பி. எந்திரத்திலும் பணிக்கு சென்று வந்துள்ளார்.
நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற திருவருள்செல்வன் மாலையில் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் அவர் அங்குள்ள சாலையோரம் மயங்கி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் திருவருள்செல்வன் பிணமாக கிடந்தார்.
அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. வாகனம் மோதியதில் இறந்தாரா? அல்லது யாராவது அடித்து தூக்கி வீசி சென்றார்களா? என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளிதரன், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் அருகே உள்ள வெளிபட்டிணம் நாகநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் திருவருள் செல்வன் (வயது18). இவர், தந்தை வைத்துள்ள டிராக்டரில் கிளீனராக செயல்பட்டு வந்தார். அங்கு வேலை இல்லாத நேரத்தில் ஜே.சி.பி. எந்திரத்திலும் பணிக்கு சென்று வந்துள்ளார்.
நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற திருவருள்செல்வன் மாலையில் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் அவர் அங்குள்ள சாலையோரம் மயங்கி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் திருவருள்செல்வன் பிணமாக கிடந்தார்.
அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. வாகனம் மோதியதில் இறந்தாரா? அல்லது யாராவது அடித்து தூக்கி வீசி சென்றார்களா? என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளிதரன், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இராமநாதபுரம் அருகே வாலிபர் மர்மச்சாவு: சாலையோரம் பிணமாக கிடந்ததால் பரபரப்பு”
Post a Comment