26 November 2013
தனியார் நிறுவனத்தின் 8வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
Do you like this story?
தனியார் நிறுவனத்தின் 8வது மாடியிலிருந்து குதித்து
இளம்பெண் தற்கொலை
சென்னை:
மயிலாப்பூர் அருகே தனியார் நிறுவனத்தின் 8வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அயனாவரம் வசந்தாகார்டன் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(42). இவரது மகள் ராஜலட்சுமி(25). இவர் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டி சென்டர் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். தினமும் பஸ்ஸில் வேலைக்கு வந்து செல்வார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரை காதலித்தாகவும், இது அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால் சில நாள்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் சோகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை 9.30 மணிக்கு ராஜலட்சுமி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தின் 8 வது மாடியில் வெளிப்பக்கத்துக்கு சென்ற ராஜலட்சுமி, திடீரென அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. மிகவும் உயரத்தில் இருந்து விழுந்ததால் ராஜலட்சுமியின் 2 கால்களும் முறிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
இதை பார்த்த ஊழியர்கள் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜலட்சுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். சடலத்தை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகிறோம் என்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை 9.30 மணிக்கு ராஜலட்சுமி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தின் 8 வது மாடியில் வெளிப்பக்கத்துக்கு சென்ற ராஜலட்சுமி, திடீரென அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. மிகவும் உயரத்தில் இருந்து விழுந்ததால் ராஜலட்சுமியின் 2 கால்களும் முறிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
இதை பார்த்த ஊழியர்கள் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜலட்சுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். சடலத்தை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகிறோம் என்றனர்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “தனியார் நிறுவனத்தின் 8வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை”
Post a Comment