16 December 2013
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்
Do you like this story?
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம்
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்
புதுக்கடை:
கண்ணியம் காக்க வேண்டிய காவல்துறையில், பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டரை, இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பால்ராஜ். இரவு பணியில் ஈடுபட்ட இவர் பணியை முடித்து விட்டு நேற்று முன்தினம் அதிகாலை வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் போலீசாரின் வருகை பதிவேட்டை இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து சரிபார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் பணிக்கு வரவில்லை என்று கூறி, அவருக்கு ஆப்சென்ட் போட்டுவிட்டு சென்றுவிட்டார். மதியம் மீண்டும் பணிக்கு வந்த பால்ராஜ், இரவு வரை ஸ்டேஷனிலேயே இருந்துள்ளார்.
இதற்கிடையே, இரவு சுமார் 9 மணிக்கு இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து மீண்டும் காவல் நிலையம் வந்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜை பார்த்ததும், உனக்கு ஆப்சென்ட் போட்டுள்ளேனே... எதற்காக பணிக்கு வந்தாய் என்று கேள்வி எழுப்பியதோடு அவரை திட்டி உள்ளார். இதைபார்த்து சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்று பால்ராஜ் நின்றுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் அவர் நின்றிருந்த இடத்திற்கும் சென்று திட்டினார். ஆத்திரம் அடங்காத இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அந்த பகுதி பொது மக்கள், காவல் நிலையம் முன்பு குவிந்தனர். பொதுமக்கள் வந்த பின்னரும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை தாக்கியுள்ளார். நேரம் ஆக ஆக பொதுமக்கள் அதிகமாக கூடியதால் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து, தனது அறைக்குள் சென்றுள்ளார். படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த பால்ராஜை, பொதுமக்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே, இரவு சுமார் 9 மணிக்கு இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து மீண்டும் காவல் நிலையம் வந்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜை பார்த்ததும், உனக்கு ஆப்சென்ட் போட்டுள்ளேனே... எதற்காக பணிக்கு வந்தாய் என்று கேள்வி எழுப்பியதோடு அவரை திட்டி உள்ளார். இதைபார்த்து சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்று பால்ராஜ் நின்றுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் அவர் நின்றிருந்த இடத்திற்கும் சென்று திட்டினார். ஆத்திரம் அடங்காத இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அந்த பகுதி பொது மக்கள், காவல் நிலையம் முன்பு குவிந்தனர். பொதுமக்கள் வந்த பின்னரும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை தாக்கியுள்ளார். நேரம் ஆக ஆக பொதுமக்கள் அதிகமாக கூடியதால் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து, தனது அறைக்குள் சென்றுள்ளார். படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த பால்ராஜை, பொதுமக்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பொது மக்கள் மற்றும் சக போலீஸ்காரர்கள் முன்னிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் புதுக்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்”
Post a Comment