20 December 2013
இராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் காவல் உதவி மையம் தொடக்கம்
Do you like this story?
இராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில்
காவல் உதவி மையம் தொடக்கம்
இராமேசுவரம்:
இராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத்தார்.
காவல் உதவி மையம்
இராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடுவார்கள். அதன் பின்னர் அந்த கடற்கரையில் பூஜைகள் செய்து விட்டு அதன் பின்னர் தான் கோவிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராட செல்வது வழக்கம். அவ்வாறு அக்னி தீர்த்த கடலில் நீராட வரும் பக்தர்களிடம் பல முறை பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் திருடு போயுள்ளன.
இந்த நிலையில் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் பக்தர்களிடம் நடைபெறும் திருட்டை தடுக்கவும், பக்தர்களின் உதவிக்காகவும் அக்னி தீர்த்த கடற்கரையில் புதிதாக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கலெக் டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், தாசில்தார் மீனாட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக் கேற்றினர்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குமார், ஞானராஜ், மணிவண்ணன், மகேசுவரி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார், யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குமார், ஞானராஜ், மணிவண்ணன், மகேசுவரி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார், யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் காவல் உதவி மையம் தொடக்கம் ”
Post a Comment