25 May 2013

பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறிப்பு: மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அட்டகாசம்

பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறிப்பு: மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அட்டகாசம்


ராமநாதபுரம், மே. 25:

ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதி வைகை நகர் தங்கப்ப புரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி காஞ்சனாதேவி (வயது 53). இவர் நேற்று மாலை வைகாசி விசாகத்தையொட்டி அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஓம்சக்தி நகர் வடக்கு பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் காஞ்சனாதேவியை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயற்சித்தனர். அப்போது காஞ்சனா தேவி அவர்களுடன் சண்டைபோட்டார். இதில் 5 பவுன் நகை வாலிபர்கள் கையில் சிக்கிக் கொண்டது. 2 பவுன் நகை காஞ்சனா தேவி கையில் சிக்கிக் கொண்டது. நகையை பறித்த மோட்டார் சைக்கிள் வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து கேணிக்கரை போலீசில் காஞ்சனாதேவி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

0 Responses to “பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறிப்பு: மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அட்டகாசம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT