11 June 2013

இராமநாதபுரத்தில் கஞ்சா, ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது

இராமநாதபுரத்தில் கஞ்சா, ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது




இராமநாதபுரம்:

இராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வண்டிக்காரத்தெரு பகுதியில் ரோந்து சென்றார். 

அப்போது தாலுகா அலுவலகம் அருகில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த வாலாந்தரவை தர்மராஜ் (வயது 35), ராமநாதபுரம் சேட்இபுராகிம் நகர் ஆறுமுகம் மகன் அசோக் (25) ஆகியோரை பிடித்து சோதனை செய்தார். இதில் அவர்களிடம் கத்தி, 1 கிலோ 100 கிராம் கஞ்சா ஆகியவை இருந்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த பஜார் போலீசார் 2 பேரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.




0 Responses to “இராமநாதபுரத்தில் கஞ்சா, ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT