11 June 2013

தூத்துக்குடியில் இன்று சேது சமுத்திரதிட்டத்தை நிறைவேற்ற கோரி ஸ்டிரைக்

தூத்துக்குடியில் 

இன்று

சேது சமுத்திரதிட்டத்தை நிறைவேற்ற கோரி ஸ்டிரைக்



தூத்துக்குடி:

                        சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி தூத்துக்குடியில் இன்று (11ம் தேதி) பொது வேலைநிறுத்தம் நடக்கிறது.

சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி, தூத்துக்குடியில் மீண்டும் போராட் டம் தலை தூக்கியுள்ளது. இதனை வலியுறுத்தி தூத்துக்குடியில் புதிதாக சேதுகால்வாய் திட்ட போராட்ட குழு துவக்கப்பட்டது. மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி இதனை துவக்கியுள்ளார். 

இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந் தது. இதில் சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி, தூத்துக்குடியில் இன்று (11ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொது வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இதற்கு அனைத்து வியாபாரிகள் சங்கம், திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,  விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் ஆட்டோக்கள், வேன்கள், டூரிஸ்ட் கார்கள், மினிபஸ்கள் உள்ளிட்டவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படும் நிலை உள்ளது.

0 Responses to “தூத்துக்குடியில் இன்று சேது சமுத்திரதிட்டத்தை நிறைவேற்ற கோரி ஸ்டிரைக்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT