10 October 2013
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு : முதல்வர் ஜெ. அறிவிப்பு
Do you like this story?
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு
முதல்வர் ஜெ. அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை(டி.ஏ) 10 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம், 18 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூடுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதனால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சம் பென்சன்தாரர்கள் என 80 லட்சம் பேர் பயனடைந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை: மக்கள் தொண்டினை செய்யும் வாய்ப்பையும், அதற்கான வழிமுறையையும் பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காப்பதிலும், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படியை 1.7.2013 முதல் 10 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை அதே 10 சதவீதம் உயர்த்தி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 2,292 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை: மக்கள் தொண்டினை செய்யும் வாய்ப்பையும், அதற்கான வழிமுறையையும் பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காப்பதிலும், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படியை 1.7.2013 முதல் 10 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை அதே 10 சதவீதம் உயர்த்தி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 2,292 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு : முதல்வர் ஜெ. அறிவிப்பு”
Post a Comment