14 October 2013
தமிழ் படத்துக்கு டிமிக்கி : இலியானா போல் அஞ்சலியும் ஒதுங்குகிறார்
Do you like this story?
தமிழ் படத்துக்கு டிமிக்கி : இலியானா போல் அஞ்சலியும் ஒதுங்குகிறார்
தமிழ் படங்களில் அஞ்சலி இனி நடிக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறிய அஞ்சலி, திடீரென 5 நாட்கள் மாயமானார். அவர் மும்பையில் தங்கியிருந்தது பிறகு தெரிந்தது. அவரே ஐதராபாத்துக்கு திரும்பி, போலீசிலும் ஆஜர் ஆனார்.
இப்போது தமிழ் பட இயக்குனர்கள் அவரை தொடர்புகொள்ள சிரமப்படுகிறார்கள். தமிழ் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருந்தது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் அந்த வாய்ப்புகள் பறிபோனது என்கிறது கோலிவுட் தரப்பு. தமிழ் சினிமா ஆட்கள் தன்னை தொடர்பு கொள்ளக்கூடாது என்பதற்காகவே அவர் ஒதுங்கி செல்வதாக கூறப்படுகிறது.
தமிழ் படத்தில் நடிக்க சென்னைக்கு வந்தால் சித்தியும் அவரது சகாக்களும் மீண்டும் தன்னை டாமினேட் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ் சினிமா துறையில் இதுநாள் வரை சந்தித்த டார்ச்சரும் தொடரும் என அஞ்சலி அஞ்சுகிறாராம். அதனாலேயே அவர் தெலுங்கு படங்களே கதி என கிடக்கிறார்.
இலியானா, அனுஷ்கா உள்ளிட்ட பெரும்பாலான ஹீரோயின்கள் தமிழில் ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவே வேண்டாம் என ஓடியது இண்டஸ்ட்ரி அறிந்ததுதான். முன்னணி ஹீரோயின்களாக மாறிய பிறகுதான் அவர்கள் தமிழில் மீண்டும் நடிக்க வந்தார்கள். அஞ்சலியை மிரட்டும் அதே டார்ச்சர் பயம்தான் குறிப்பிட்ட நடிகைகள் தமிழ் பட வாய்ப்புகளை ஏற்க மறுப்பதற்கு காரணமாக உள்ளது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “தமிழ் படத்துக்கு டிமிக்கி : இலியானா போல் அஞ்சலியும் ஒதுங்குகிறார் ”
Post a Comment