27 November 2013
கள்ளக்காதலனுக்காக கொலை செய்ய சம்மதித்தேன் : கைதான பெண் வாக்குமூலம்
Do you like this story?
கள்ளக்காதலனுக்காக கொலை செய்ய சம்மதித்தேன்
கைதான பெண் வாக்குமூலம்
திருச்சி:
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர்கள் தங்கவேல்-யமுனா தம்பதி. இவர்களது மகள் சத்யா என்ற வினிதா(24), மகன் செல்வகுமார்(22). தங்கவேல் கடந்த 8 ஆண்டுக்கு முன் மாயமாகிவிட்டார். யமுனா, தனது தாய் சீதாலட்சுமி(75), சத்யா, செல்வகுமாருடன் வசித்துவந்தார்.
புலிவலம் அடுத்த பெரியகாட்டுக்குளம் அருகில் கடந்த 2ம் தேதி சாக்கு மூட்டையில் ஆண் சடலமும், கடந்த 17ம் தேதி பிளாஸ்டிக் பேரலில் பெண்ணின் சடலமும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தன.
புலிவலம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் செல்வகுமார், சத்யா என்பது தெரியவந்தது. மேலும் யமுனா மற்றும் தாய் சீதாலட்சுமி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்தபோது, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கண்ணன்(42) என்பவருக்கும், யமுனாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் வீடு திரும்பிய யமுனா, சீதாலட்சுமியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, கள்ளக்காதலனுக்காக கணவன், மகன், மகளை கொல்ல யமுனா உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதில், மகனையும் மகளையும் வீட்டிலேயே கண்ணன் கொலை செய்து சடலத்தை வெளியே எடுத்துச் சென்று வீசியதாக போலீசில் யமுனா வாக்குமூலம் அளித்துள்ளார். யமுனா மற்றும் அவரது தாய் சீதாலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கள்ளக்காதலனுக்காக கொலை செய்ய சம்மதித்தேன் : கைதான பெண் வாக்குமூலம்”
Post a Comment