22 December 2013

திருவாடானை அருகே பட்டாசு கடையில் தீ விபத்து

திருவாடானை அருகே பட்டாசு கடையில் தீ விபத்து



திருவாடானை, டிச. 22:

திருவாடானை சன்னதி தெருவில் பழனி என்பவர் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது கடைக்கு அருகில் பட்டாசு கடை ஒன்றை சிறிய அளவில் நடத்தி வந்தார்.

இங்கு நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ஆர்.எஸ்.மங்கலம் திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Responses to “திருவாடானை அருகே பட்டாசு கடையில் தீ விபத்து”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT