23 December 2013
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி
Do you like this story?
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி
ஆஸ்பத்திரியில் அனுமதி
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தமிழில் 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருடைய இசை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கும். சிம்பொனி இசையில் சாதனை புரிந்திருக்கும் இவரது இசை உலகமெங்கும் பரவி உள்ளது.
‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் கடந்த 30-வருடங்களுக்கும் மேலாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இன்று இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நலம் மெல்ல தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி”
Post a Comment