7 December 2013

மத்திய அமைச்சர் சிரஞ்சீவி ராஜினாமா... சோனியாவுக்கு கடிதம் அனுப்பினார்...

மத்திய அமைச்சர் சிரஞ்சீவி ராஜினாமா... 
சோனியாவுக்கு கடிதம் அனுப்பினார்...


புதுடெல்லி: 

தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் 2 நாள் பந்த் நடத்த ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் முடிவு செய்தன. இந்நிலையில், தனது சார்பில் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ஆந்திராவைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா செய்வதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

வழக்கமாக மத்திய அமைச்சர்களின் ராஜினாமா கடிதம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், சிரஞ்சீவி விதிமுறைக்கு மாறாக காங்கிரஸ் கட்சி தலைவருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். மாநிலங்களவையில் தனது ராஜினாமாவை சிரஞ்சீவி முறைப்படி அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to “மத்திய அமைச்சர் சிரஞ்சீவி ராஜினாமா... சோனியாவுக்கு கடிதம் அனுப்பினார்...”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT