27 July 2013
இராமேஸ்வரம் - ராமநாத சுவாமி கோவிலை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: 54 லாட்ஜூகளுக்கு இன்று அதிகாரிகள் சீல்
Do you like this story?
இராமேஸ்வரம் - ராமநாத சுவாமி கோவிலை தாக்க தீவிரவாதிகள் திட்டம்
54 லாட்ஜூகளுக்கு இன்று அதிகாரிகள் சீல்
இராமேஸ்வரம், ஜூலை 27:
இராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்பு படையினர், ஹெலிகாப்டரில் பறந்தபடி கண்காணித்து வருகின்றனர்.
அதிக ஒலி ஒழுப்பும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இராமநாதபுரத்தில் உள்ள லாட்ஜூகளில் சோதனை செய்யப்பட்டன.
மேலும் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இராமநாதபுரத்தில் உள்ள லாட்ஜூகளில் சோதனை செய்யப்பட்டன.
அப்போது, 54 லாட்ஜூகள் உரிய அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை மூடும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அனுமதியின்றி இயங்கி வந்த 54 லாட்ஜூகளுக்கும் இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த லாட்ஜ் உரிமையாளர்கள் மீது விரைவில் வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அனுமதியின்றி இயங்கி வந்த 54 லாட்ஜூகளுக்கும் இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த லாட்ஜ் உரிமையாளர்கள் மீது விரைவில் வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அத்துடன் இராமேஸ்வரத்தில் அனைத்து லாட்ஜ்களையும் தீவிரமாக கண்காணிக்குமாறு மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இராமேஸ்வரம் - ராமநாத சுவாமி கோவிலை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: 54 லாட்ஜூகளுக்கு இன்று அதிகாரிகள் சீல்”
Post a Comment