21 July 2013

புவனேஸ்வரில் ‘பேஸ்புக்’ மூலம் சிக்கிய பெண்ணைடேட்டிங் அழைத்துச் சென்று நண்பர்களுடன் பலாத்காரம்

புவனேஸ்வரில் கொடூரம் ‘பேஸ்புக்’ மூலம் சிக்கிய பெண்ணை 
டேட்டிங் அழைத்துச் சென்று நண்பர்களுடன் பலாத்காரம்


புவனேஸ்வர்: பேஸ் புக் மூலம் நட்பு ஏற்பட்ட பெண்ணை டேட்டிங் அழைத்துச்சென்று நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த தனியார் கல்வி நிறுவன இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.புவேனேஸ்வரை சேர்ந்த தனியார் கல்வி நிறுவன இயக்குனர் ஜிதேந்திர பிஸ்வால் (28). பேஸ்புக்கில் சாட்டிங் செய்யும்போது 23 வயது இன்ஜினி யரிங் பட்டதாரி பெண்ணின் நட்பு கிடைத் தது. சில நாட்களுக்கு பிறகு இருவரும் தங்கள் மொபைல் எண்ணை பரிமாறிக்கொண்டனர். நாளடைவில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு நெருக்கமானது. இதையடுத்து பிஸ்வால் அந்த பெண்ணை டேட்டிங்கிற்கு அழைத்துள்ளார். அந்த பெண்ணை தனது காரில் அப்பகுதியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள் ளார்.அதன்பிறகு நகரின் பல பகுதிகளில் சுற்றிய பிஸ்வால், வழியில் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண் டார்.

நண்பரும் பிஸ்வாலும் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அவரை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்துள்ளனர். ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் காரை நிறுத்தியுள்ளனர். அங்கு பிஸ்வால் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள் ளார். பிஸ்வாலின் நண்பரும், கார் டிரைவரும் அடுத்தடுத்து பலாத்காரம் செய்துள்ளனர்.அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட் டார். இதைக்கேட்ட அப்பகுதி மக்கள் சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்ததும் நண்பரும், டிரைவரும் ஓட்டம் பிடித்தனர். பிஸ்வால் மட்டும் சிக்கினார். பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டனர். பிஸ்வாலை கைது செய்தனர். தப்பியோடிய  இருவரையும் தேடி வருகின்றனர்.

0 Responses to “புவனேஸ்வரில் ‘பேஸ்புக்’ மூலம் சிக்கிய பெண்ணைடேட்டிங் அழைத்துச் சென்று நண்பர்களுடன் பலாத்காரம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT