15 November 2013

மும்பை டெஸ்ட் போட்டி சதத்தை தவறவிட்டார் சச்சின் : 74 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்...

மும்பை டெஸ்ட் போட்டி
சதத்தை தவறவிட்டார் சச்சின் : 74 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்...



மும்பை: 
                மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதத்தை தவறவிட்டார். இன்றைய ஆட்டத்தில் அரை சதம் அடித்த அவர் 74 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். 

இன்றைய ஆட்டத்தில் சதம் அடிக்க வேண்டும் என்று வான்கடே முழுவதும் ரசிகர்கள் சச்சின், சச்சின் என உற்சாகப் படுத்தினர். அவர் சந்திக்கும் ஒவ்வொரு பந்தையும் ரசிகர்கள் தீபாவளி கர ஒலி எழுப்பி ஊக்கம் கொடுத்து வந்தனர். 

இந்நிலையில் அவர் 74 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 38 ரன்களுடனும் களத்தில் இருந்த சச்சின் இன்று அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 118 பந்துகளுக்கு 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.

0 Responses to “மும்பை டெஸ்ட் போட்டி சதத்தை தவறவிட்டார் சச்சின் : 74 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்...”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT