15 November 2013

அழகு நிலையத்தில் பெண் கொடூர கொலை

அழகு நிலையத்தில் பெண் கொடூர கொலை



புழல்: 

                 செங்குன்றம் அடுத்த பவானி நகரை சேர்ந்தவர் கணேஷ் என்ற ஜெயகணேஷ். இவரது மனைவி மாலினி (32), புழல் காந்தி தெருவில் அழகுநிலையம் நடத்தி வந்தார். அழகு நிலையத்தில் இருந்த மாலினி நேற்று மாலை 7 மணியளவில் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். 

அங்கு வந்தவர்கள் பார்த்து புழல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திரபோஸ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மாலினி கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.  

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாலினியை யார் கொலை செய்தார்கள் என விசாரிக்கின்றனர்.

0 Responses to “அழகு நிலையத்தில் பெண் கொடூர கொலை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT