11 December 2013
அஞ்சலியை கை கழுவும் ஆந்திர சினிமா
Do you like this story?
அஞ்சலியை கை கழுவும் ஆந்திர சினிமா
'அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும்' போன்ற, மெகா ஹிட் படங்களில் நடித்த அஞ்சலி, தமிழ் சினிமாவில், ஒரு பெரிய ரவுண்டு வருவார் என, எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால், சித்தியுடன் ஏற்பட்ட தகராறு, அதைத் தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணைகள், கோர்ட், போன்ற விவகாரங்களால், தமிழ் சினிமாவில் இருந்து, அஞ்சலி தலைமறைவானார். தெலுங்கு சினிமாவிலேயே, தொடர்ந்து, கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி வந்தார். ஆனால், சமீபகாலமாக, அவரை தெலுங்கு சினிமாவிலும், அதிகமாக காண முடியவில்லை.
இந்த இடைவெளியை பயன்படுத்தி, 'அஞ்சலி, யாரையோ திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்' என்பது போன்ற, வதந்திகளையும், கிளப்பி விட்டுள்ளனர். ஆனால், அஞ்சலியின் உடல், இப்போது, மிகவும் குண்டடித்து விட்டதால் தான், அவரை படங்களுக்கு புக் செய்ய, தயக்கம் காட்டுகின்றனராம், ஆந்திரவாலாக்கள். 'ஹீரோக்களுக்கு, அக்கா, அண்ணி மாதிரி இருப்பதால், அவரை ஓரம் கட்டி விட்டோம்' என்கின்றனர், தெலுங்கு திரையுலகினர்.
ஆனால், அஞ்சலி தரப்பிலிருந்து, இதற்கு இன்னும் எந்த ரியாக்ஷனும் இல்லை.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “அஞ்சலியை கை கழுவும் ஆந்திர சினிமா”
Post a Comment