16 May 2013

ஸ்பாட் பிக்ஸிங்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் -2 ராஜஸ்தான் வீரர்களும் கைது

ஸ்பாட் பிக்ஸிங்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் -2 ராஜஸ்தான் வீரர்களும் கைது

 டெல்லி: ஸ்பாட் பிக்ஸிங் புகாரின் பேரில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் இருவர் கைதாகியுள்ளனர். மும்பை போலீஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக இவர்கள் சிக்கியுள்ளனர். ஸ்ரீசாந்த் தவிர, அஜித் சண்டிலா மற்றும் அங்கித் சவான் ஆகியோரும் பிடிபட்டுள்ளனர். மும்பையில் வைத்து இவர்களைப் போலீஸார் கைது செய்து டெல்லி கொண்டு வந்துள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் 7 புக்கிகளும் சிக்கியுள்ளனர். இந்த வாரத்தில் நடந்த பல்வேறு போட்டிகளை ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக இவர்கள் மீது போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக நடிகை ஷில்பாஷெட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to “ஸ்பாட் பிக்ஸிங்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் -2 ராஜஸ்தான் வீரர்களும் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT